பெயர் :ரூபாஸ்ரீ
தலைப்பு :
காமுக கொடூர அரக்கர்கள்!!!
⚖️பிஞ்சு மனமடா
பால் குணமடா
மனிதமே மறித்து விட்டதோ!!!
⚖️மண்ணில் சிறிதும் ஈரம் இல்லையே
உங்களுக்கான தண்டனை
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்றன!!!
⚖️சட்டத்தின் ஓட்டைகளில்
நீ தப்பித்தால்
சகலத்தின் அரசனான
இறைவனிடம் பதில் உரைக்க வேண்டும்!!!
⚖️உங்கள்
ஒவ்வொருவரின் ஒவ்வொரு
உறுப்புகளும் உருக்குலைந்து
தீயிலிட்டு சிதைந்து போகட்டும்!!!
⚖️மனித தண்டனைகள்
பத்தாதடா
ஏழாண்டு
சிறைதண்டனையை ஏழுயுகம் மறக்காமல் செய்ய வேண்டும்!!!
⚖️பச்சிளம் குழந்தையிடத்து
காமுகனின் இன்பமென்ன??
⚖️துகிலுரித்த காமுகன் உடலின்
தோலுரித்து உப்பிட்டால்தான் என்ன??
⚖️நீதியின் முன் நிறுத்தினாலும் அவனை
சட்டத்தின் ஓட்டை காக்கும்!!!
⚖️நீதியினை கையில் எடுப்போம்
நீசனுக்கே தண்டனை கொடுப்போம்!!!
⚖️நிற்க வைத்து சுட்டால் அவனும்
நிமிடத்தில் செத்தொழிவான்
வலி தெரியாமல் அவனின்
வாழ்நாளும் முடிந்திடலாமா??
⚖️சாகும்வரை ஓட விரட்டி
சாட்டையிலே கா முகனை அடித்து
சதைகள் பிய்ந்து குருதியில் நனைத்து
குலைத்திடுவோம் உருத்தெரியாமல்!!!
@ arun⚖️
@ kamu pillai ⚖️
0 Comments