பெண்ணியம்

தலைப்பு: பெண்ணியம்

முதலிடம்
கவிதையின் காதலன் பாண்டி


🍁பிரம்மன் படைப்பில் மலரே உயிர் கொண்டு பெண்ணாக  வந்தாயோ... 

🍁மலரை விட மென்மை குணமும் புன்னகை வெட்கம் பேரழகு... 

🍁பூப்படையும் புனிதமும்
தீட்டு என்னும் போது கோபமும் உச்சம் தொடும்.. 

🍁மென்மையை படைத்து அதில் வலியையும் புகுத்தி கண்ணீர் இங்கே குருதி ஆனது... 

🍁குருதியும் இங்கே தீராத கண்ணீரானது... 

🍁மறுபிறவிக்காக அவளும்  போராடினால் அந்த வரம் கிடைக்காமல் மலடி என்ற பட்டம் வாங்கினாள்... 

🍁வலிகள் எப்போதும் வலிகளே அதோடு வாழ்வதே அவள் வாழ்க்கையானது... 

🍁புன்னகை செய்வது பூப்படைவதும்  மலரின் இயல்புதானே ...

🍁இதற்கு பறித்து விடும் தண்டனை உடனே கிடைப்பது நியாயமா குழந்தை திருமணம் அவர்களுக்கு மட்டுமே கிடைத்த சாபமா... 

🍁குல விளக்கை  ஒளிவீச தடுக்கும்  வரதட்சணை இது  பல பெண்களுக்கு முதல் பிரச்சனை... 

🍁குடிமகனால் நாட்டிற்கு வரும்   வருமானமோ
 பெண்ணிற்கு  தினமும் அவமானம்... 

🍁உயிர் என்று நினைத்ததால் தானே வலி சுமந்து உருவம் கொடுக்கிறாள் சிசுவிற்கு... 

🍁பலரோ  பெண்களை சதை என்று பார்த்ததால் தானே  பாலியல் வன்கொடுமை நடக்கிறது... 

🍁உன் வாழ்க்கை என்பது போராட்டம் என்றாலும் 
பெண்னே நீ போராடினால் உனக்கு மட்டுமே என்றும் கொண்டாட்டம்... 

🍁அனைத்து துறைகளிலும்  
சாதனை உனக்கு புதிது இல்லை சரித்திரமோ உன் இனத்தின் எல்லை...


@⁨Kamu Pillai⁩ @⁨sow karthi⁩

0 Comments