*ம.சுதா கவி*
சிவகங்கை மாவட்டம்

*படக் கவிதை போட்டி*

தலைப்பு : *எட்டாத புத்திக்கு எட்ட‌‌ வைத்தாயோ* 😢....

அழகாய் கரைந்தாய் 
அற்புத பனியே 
அலையில் உதிர்ந்தாய்
அரும்பு மலரே !

மண்ணில் சாய்ந்தே
இமைகள் சிமிட்டாயோ 
புனலில் மிதந்து கரையின் 
பாதம் வந்தாயோ !

யாரும் இல்லா வெறுமை
உந்தன் முகம்‌ காட்டாதோ
உன்னை காணுகையில் 
உதிரும் கொட்டுதையா !

உன் மேனி திரும்பி - எந்தன் 
துக்கம் தூண்டுதையா
கடல் மாதா மடியில்
தவழ்ந்தே உறங்கினாயோ !

மண்ணை கட்டி கொண்டு 
மதியை செவி சாய்த்து 
மரணம் எனக்கா என்று 
அந்த இறைவனை கேட்டாயா ?

உந்தன் தாய் உன்னை 
கடலோரம் விட்டு விட்டு
காது கேளாது சென்றாளோ 
கடல் அலை ரசிக்கவே !

உன் விரல் பிடிக்கும் தந்தை                       உனை  மண்ணோடு உலவ விட்டு
இணையத்தே விழுந்ததாலே 
நீ கரையோரம் மிதந்தாயோ‌ !

உன் காற் செருப்பை நீ                        காட்டுவது அசாக்கிரதை கொண்ட எம்மை தலையார அடிக்க வேண்டும் என்றே அர்த்தமோ !

உன்னை காணும் இந்த நிலை எமக்கு ஏன் கிட்டியது வேதனை நான் பட்டிடவா ?இதுபோன்று இனி வேண்டாம் என்றே எனை தட்டி எழுப்பினாயோ !!!


@ Arun 
@ Kamu Pillai