என் உயிருக்கு ஒரு காதல் கடிதம்

பெயர்: ரூபா ஸ்ரீ 

*தூது போகும் காதல் கடிதம்* 

🪶நான் தேடலில் நுழைந்தபோது
என் ஒளியாய் நீ..!!

🪶தானாய் எந்தன் நாவின் நுனிகள்
உந்தன் பெயரைச் சொல்லி
எனக்கு நினைவூட்டுகிறது..!!

🪶என்ன எழுத சொல்லுகிறாய் ..? 
உனக்கு தனியாக 
எழுத வேண்டியதை.. 
அதுவும்.. 
பொதுவான இடத்தில்..!!

🪶இது வெறும் காகிதமடல் அல்ல 
என் இதயத்தின் ஒருபகுதி..!!

🪶எத்தனை முறை உன்னுடன் பேசினாலும் உனக்கு 
என் நினைவுகளை கடிதம் எழுதும் போது ஒரு சுகம் சொர்க்கத்துக்கு நிகரானதடா..!!

🪶கடிதம் எல்லாம் பொக்கிஷமாய் 
நினைவில் வாழும் நிரந்தரமாய்..!! 

🪶அழிந்து போகா அஞ்சல் - நம் 
அன்பை வளர்க்கும் நெஞ்சில்..!!

🪶தீங்கனியும் நாவினில் வேம்பாய்க் கசந்திடும் 
மாங்கனி பார்த்தால் மதிமுகமாய்த் தோன்றிடும்..!!

🪶கரைதேடும் கடல்மீது படகாய்த் தவிக்கிறேன்..!!

🪶உன்னை கண்ட நாளில்.. 
உன்னால்.. 
என் மனதில் விழுந்த.. 
அந்த காதல் விதை...!!

🪶இன்னும் 
இரண்டு இலைகள் விட்ட
வளர்ச்சியோடே இருக்கிறது..!! 

 *அதுஉன்னால்..!!*

🪶வளர்க்கப்படவும் இல்லை..!!

🪶அழிக்கப்படவும் இல்லை..!!

🪶கனத்த வலியதைச் 
சுமக்கும் மனத்தினை 
வர்ணிக்குமோ வென் 
வார்த்தைச் சங்கிலி?!

🪶தவிக்கும் இதயத்தின் 
கதறலைச் சொல்லும் 
பொருத்தமானதோர் 
கவித்துளி தேடினேன்...!!

🪶தொடருவேன் 
           தூதை🪶

@ arun🪶
@Kammu pillai 🪶

0 Comments