*ம.சுதா கவி* சிவகங்கை மாவட்டம்
தலைப்பு : *உறவுகள் பலவிதம்*
ஞான ஒளி திறக்கும் ஆசான் உறவுகள்//
கான ஒலி சிறக்கும்
தியான இறைவிகள்//
நெஞ்சத்தில் பலம் கோர்க்கும் தோழமை வரவுகள்//
பஞ்சத்தில் தோள் கொடுக்கும் கடமை உறவுகள்//
காந்த நூல் சேர்க்கும் தமிழ் அன்னையின் இளமைகள்//
தாளங்கள் முழங்கும் இசையின் கவிதைகள்//
கோலங்கள் போடும் வானத்தின் துணுக்குகள்//
வில்லாய் வலைந்த வர்ணத்தின் மாளிகை உறவுகள்//
உள்ளத்தை கீரிடும் தூரோக உறவுகள்//
உதிரத்தை கொடுத்திடும் முகமில்லா உறவுகள்//
உள்ளங்கை வைத்தே உருவம் செதுக்கிய//
ஆன்மாவில் அசைந்தாடும் காரிகை உறவுகள்//
தூரிகை கையாழும் தாரகை வரவுகள்//
சட்டென தொலைந்தே
காயங்கள் செய்யுமே//
திரும்பா இடம் செல்லும் விடைபெற்ற உறவுகள்//
கண்ணில் ஆறாய் வேதனை சிந்தியே//
கரை புரண்ட வெள்ளமாய் சாய்ந்திடும்//
சாதனை வண்ணமாய் சித்திர உறவுகள்//
காயங்கள் கொண்டே நர்த்தனம் புரியும்//
பணமில்லா வறுமை மிஞ்சியே சென்றிடும்//
பல வேஷ உறவுகள் அல்ல செலவுகள் அவை தூரமே//
கேளி செய்த பல உறவுகள் அங்கே நான் முன்னேறுகிறேன்//
முதுகெலும்பு இல்லாத மூடர்கள் மத்தியில்//
புதிதாய் நானும் பிறக்கிறேன் முயற்சியிலே//
வெற்றியில் கூடும் செலவுகளாய் உறவுகள் வேண்டாம்//
முயற்சிக்கு ஆதரவு சேரும் புனித உறவுகள் போதும்//
வர்ணங்கள் பல உண்டு
அதிற் சிறந்தது உறவின் பலவிதம்//
கடலில் மிதக்கின்ற சறுகாய் நானில்லை//
பல உறவின் மத்தியிலே சிகரம் நான் என்பேன்//
@ Arun
@ Kamu Pillai
0 Comments