*ம.சுதா கவி சிவகங்கை மாவட்டம்*
31.10.2021
தலைப்பு: *"என் உயிருக்கு ஒரு காதல் கடிதம்"*
*//(தமிழ் எந்தன் காதலி)//*
இமை எண்ணும் எழுத்து வழி என்னை சுண்டி இழுத்தவளே//
கருவிழி யின் ஒளி மரபில் எந்தன் மனம் கவர்ந்தவளே//
வேர் சொற்கள் படையெடுத்தே கருங்கூந்தல் கலைத்திடுவாய்//
தனிமையெனும் இதழ் பறித்தே தாயமுதை பகிரந்திடுவாய்//
தேன் அமுதின் சன்னல் வழி வீரமிகு வாள் தொடுத்தாய்//
பழமை உன்னில் நினைத்தே புதுமை என்னில் மறைத்தேன்//
உந்தன் சிந்தனை இதயம் எந்தன் கூட்டில் பதித்தேன்//
மக்கள் வாழ்வை காவியப் போர்வை எனை சாய்த்ததே//
சருகாய் விழுகின்ற பனித்துளி உன்னில் மெழுகாய் நான் உருகினேன்//
பொன் ஏர் பூட்டியே விண்ணில் பவணி வருபவளே//
உன்னை நான் எட்டும் வரை தொடருகிறேன்//
பார் போற்றும் வண்ணம் உந்தன் சொற்குவையில்//
கிண்ணம் அதில் நான் கவியாய் நிறைகிறேன்//
கீழடி பிளந்த மாங்கனியே கீரியே வந்தாய் மண்ணையே//
கீர்த்தி கொடுக்கும் அன்னையே கீழடி வழியே அடையாளம் தந்தவளே//
சொல் வளத்தின் சரிகையிலே சுழற்றி என்னை சரித்த்வளே//
இலக்கியமாய் செவ்வானில் செந்தூரம் விதைத்தவளே//
கவிதை மழை செய்வேன் உன்னில் மாலை மகுடம் எனக்களிப்பாய்//
இலக்கணமாய் என் இலக்கை அடையும் வழிகாட்டியே//
எந்தன் உயிராய் கலந்த தமிழ் அவளே//
தந்தம் எழுதுகோலாய் இறைவன் எடுத்தவளே//
நான் நித்தம் நித்தம் உன்னை வரைகிறேன் //
நீ எந்தன் கரத்தினில் வளர்கிறாய்//
கவியாய் மலர்கிறாய்
விதியால் உன் மதியை நான் அறிவேன்//
அறிவுத் தமிழ் காதலியே கனனியான தமிழவளே என் தேவதையே//
உனக்காய் உன்னிலே சொற்கள் தேடி எந்தனை நிரப்புகிறேன்//
என் காதல் கடிதம் தமிழே உன் காலடி சேருமோ//
இறைவனை வேண்டி இணையத் தூது செய்கிறேன் கேளடியோ.....தமிழே !!!
@ Arun
@ Kamu Pillai
0 Comments