பெயர்
அன்பு ❤️ மட்டும்
அருண்
தலைப்பு :
தேய் பிறை
வென் மதியாக
என்னவள்
முதலிடம்...
✨என்ன இது வானத்தில் பல பல வண்ணங்கள்..!!
✨தேய் பிறை நிலவை போல தேய்ந்து கொண்டே செல்கிறது..!!
✨ஓ இது தான் என்னவளின் முகமோ..!!
✨வானவில்லை போல
என்னவளும் தேய்ந்து கொண்டே செல்கிறாளோ என் நினைவால்..!!
✨வானவில்லில் 🌈
நிறங்கள் பல உண்டா.!!
✨என்னவளே என் இதயத்தில் நீ உண்டா..!!
✨விடை தெரியாமலே
விலகி செல்லாதே..!!
✨என் விடியலை நீயும் தள்ளி செல்லாதே..!!
✨எத்தனையோ வின் மீன்கள் உன்னையே சுற்றியிருக்க..!!
✨அத்தனையும் விட்டுவிட்டு நீ என்னை மட்டும் சுற்றி திரிவது
ஏனோ..!!
✨நான் உன் அன்பில் இருப்பதால் தானோ..!!
✨திங்கள் முகம் கொண்டவளே என்னை தினம் தினம் கொன்று புதைத்தவளே..!!
✨நின் தேய் பிறை 🌙
முகம் காண என் மனம் தேய்ந்து கொண்டே செல்லுதடி..!!
✨உன் தேடலில் என்னையும் கொஞ்சம்
கொஞ்ச சொல்லி கொல்லுதடி..!!
✨மதி முகம் கொண்டவளே
என்னை மடியில் வச்சி கொஞ்சி சென்றவளே..!!
✨உன் கொஞ்சல் என்னை மீண்டும் கெஞ்சவைக்குதடி..!!
✨மீண்டும் நீ வருவாயா
உன் ஆசை கொஞ்சல் என்னை மட்டும் கொஞ்சி விட்டு போவாயா...
✨தேயாத அம்பகமாக
இருந்த என் இதயம்
இப்பொழுது உன்னை போலவே தேய்ந்து கொண்டே செல்கிறது..!!
✨உன் நினைவலைகளும் என்னை கொல்கிறது..!!
✨வான் நிலவு தேய்ந்தாலும்
என் மனதில் என்றும் தேயாத வென் மதி நீ தானே..!!
✨ஏ மின்மினி பூச்சிகளே
உங்கள் வெளிச்சத்தை நிறுத்தி விடாதீர்களே..!!
✨இருளில் இருக்கும் என்னவள் முகத்தை மறைத்து விடாதீர்களே..!!
✨மாதத்தில் ஒரு முறை அவள் மறைந்து செல்கிறாள்..!!
✨என்னை மறந்து செல்கிறாள்..!!
✨அன்று ஒர் நாள் உங்கள் வெளிச்சம் பட்டு அவள் முகம் நான் காண்பேனோ..!!
✨இல்லை இருளிலே அவள் இன்றி சோகத்தில் மிதப்பேனோ..!!
✨ஏ மின்மினி பூச்சி யே
என்னவள் முகத்தை மறைத்து விடாதே..!!
✨என்னை மண்ணோடு மண்ணாக மடித்து விடாதே..!!
✨நானும் கொஞ்சம் வாழ்ந்து செல்கிறேன் உன் வெளிச்சம் பட்டு அவள் உருவம் என்னும் நிழலில் ..!!
@Iyarkaiyin Kaarigai
@Kamu pillai Sis
0 Comments