பெயர்
அன்பு❤️ மட்டும்
அருண்
மூன்றாமிடம்...
தலைப்பு
என்னை காக்கும் காவலனே
நான் கால் பதிக்கும் இடமெல்லாம்
பூ போல இருந்து என்னை தாங்கி நிற்கிறாயே
நீ சிதை பட்டாலும்
அடி பட்டாலும்
என் பாதங்களை பாதுகாக்கிறாயே
ஏ காலணியே உன்னை பற்றி கவி எழுத எனக்கு தெரியலியே
உன்னை மிதித்து துவைத்து துன் படுத்தினாலும் கூட
அத்தனையும் தாங்கி கொண்டு என்னை தாங்கி நிற்கிறாயே
ஏ காலணியே உன்னை பற்றி கவி எழுத எனக்கு தெரியலியே
கதிரவன் கண் பட்டு
புழுதியெல்லாம் சுடும் போது
உன் மேனி முழுவதும் கொதிக்குதே
என் இதயம் முழுவதும் வலிக்குதே
ஏ காலணியே உன்னை பற்றி கவி எழுத எனக்கு தெரியலியே
என் தாய் என்னை சுமந்து நடக்கையிலே
அவளையும் என்னையும் சேர்த்து நீ சுமக்கையிலே
உன் குரல்விழி முழுவதும் இருகுதே
அதில் உன் மூச்சு காற்றும் விட மறுக்குதே
ஏ காலணியே உன்னை பற்றி கவி எழுத எனக்கு தெரியலியே
என்னை சுமந்து நீ செல்லும் போது ஒத்த முள்ளு குத்துதுனு நெஞ்ச தூக்கி நிக்கிறியே
என் நெஞ்சம் கொதிக்குதடா
உன்னை வாரி அணைக்க துடிக்குதடா
ஏ காலணியே உன்னை பற்றி கவி எழுத எனக்கு தெரியலியே
காடு மேடெல்லாம் நான் நடக்கையிலே கல்லும் முள்ளும் உன்னை குத்தி கிழிக்கையிலே
உன் உடல் முழுவதும் சிதறுதே அதை கண்டு என் உள்ளம் பதறுதே
ஏ காலணியே உன்னை பற்றி கவி எழுத எனக்கு தெரியலியே
வெளியில் நான் செல்ல செல்ல என்னை தொடர்கிறாய்
உன் பாசத்தை எனக்கு பகிர்ந்து தருகிறாய்
உன்னை உள்ளே அழைக்க என் மனம் தயங்குவது ஏனோ வெளியே விட மனமின்றி துடித்திட தானோ
ஏ காலணியே உன்னை பற்றி கவி எழுத எனக்கு தெரியலியே
பாசாத்தை பங்கு போடும் பாசா காரனே
நான் வேஷம் போட்டாலும் என்னை மீண்டும் மீண்டும்
தாங்கி நிற்க்கிறாயே
உன் பாசத்தை நான் என்ன சொல்ல
ஏ காலணியே உன்னை பற்றி கவி எழுத எனக்கு தெரியலியே
தெரிந்தால் சொல்லி விடு உன்னை மட்டுமல்ல உன் அன்பையும் நான் நேசித்து வாசிக்கிறேன்
ஏ காலணியே உன்னை பற்றி கவி எழத எனக்கும் தெரியும் என்று
@Iyarkaiyin kaarigai💙
@Kamu pillai Sis
0 Comments