ம.சுதா கவி
சிவகங்கை மாவட்டம்
தலைப்பு:
*"என்னை சுமக்கும் காலணியே"*
ஆதியில் நாமும் வேட்டை செய்தோம்//
அங்கே நாமும் காலணி இன்றி//
காட்டில வாழும் விலங்காய் நாமும்//
கல்லும் முள்ளும் காணாது வாழ்ந்தோம்//
கடலின் ஓரம் நாகரீக காலம்//
மணலில் கால்கள் புதைத்த நேரம்//
காலணியாக சேற்றை பூசிய விவசாயி//
சந்தனம் என்றே வாழ்ந்தோம் அன்று//
நாம் முன்னோர் அணிந்த காலணியோ//
மரத்தின் துண்டில் ஓர் பங்காம்//
இயற்கை தந்த அந்த காலணியாம்//
இனிதே நன்மை செய்த காலணியாம்//
துணியால் தைத்த காலணி இங்கே//
பின்பே துரித நவீன காலணியாம்//
காலணி அணியும் மக்கள் பலவிதமாம்//
அதிலே தற்போது காலணி பலரகமாம்//
அக்காலம் ஆரோக்கிய சூழலே காலணி//
சாணம் தெளித்தே நற் கோலம்//
பச்சரிசி கோலத்திலே உயிரின் உணவு//
மாவிலை தோரணம் மஞ்சள் சூரணம்//
காலணி இன்றி வாழ்ந்த காலம்//
காலணி இன்றி கால் இல்லை//
படுக்கை தாண்டும் போதும் காலணி//
நோய் வந்திடுமோ என்ற பயத்திலே//
நொடி பொழுதும் காலணியை பிரியாது//
காலணியோடு இணைந்தே வாழும் காலம்//
நோய்களை தகரத்தே எந்தன் உயிரே//
அனையாய் காத்திடும் ஆதரவே காலணியே//
என் உடல் முழுவதுமே தாங்கிய//
உலகம் சுற்றி காட்டுகிறாய் நீ//
என்னை சுமக்கும் காலணியே நீ சுமையல்ல எனக்கு//
@ lyarkaiyin Kaarigai
@ Kamu Pillai
0 Comments