ம.சுதா கவி
சிவகங்கை மாவட்டம்
முதலிடம்
தலைப்பு: *பிறை நிலவாய் அவள் முகம்*
நெடுநீல சரிகை
அதிலோர் காரிகை
அழகிய மேனகை
நிலவாய் மலருதே
செவ்வானக் கடலிலே
செந்தூர மலராய்
சலவை இதழாய்
ஞாயிறு உதிருதே !
பசுமை விரிப்பே
பாரினில் துடிப்பே
பகலவன் வருவான்
பாதியில் பூத்தாய்
கண்ணிலே விழுந்தே
இமையாய் எழுந்தாய்
காரிருள் கலைத்த
கடவுளின் அம்சமே !
இனிமை சிறகாய்
தனிமை இறகாய்
வானில் திரியும்
தேவதை பறவையே
தேனிசை பாடியே
செவியை ஆளுகின்ற
சந்தமும் நீயானாய்
சாகாத வரமே !
கர்ஜனை செய்தே
சீற்றம் தந்தாய்
மீசையை முருக்கிய
மீட்சி யின் அரசனே
கூர்மை உன்னிலே
கோர்வை செய்யுதே
பார்வை போதுமே
அச்சம் சூழந்திடுமே !
புயலாய் சூழலும்
புதிரும் நீயானாய்
சுனாமியின் சுவராய்
எங்களை எடுத்தாய்
தென்றல் கோதிடும்
கைகளும் நீதானே
மீனவ மக்களுக்கு
ஆதரவு கொடுத்தாய் !
விண்ணின் எரிக்கல்
மர்மத்தின் ஒலிக்கல்
இரண்டிலும் நீயே
நர்த்தனம் செய்வாய்
இசையாய் ஆடுகின்ற
விசையும் நீதானே
நலினம் பாடுகின்ற
கலையும் நீதானே !
இறையொளி ஆசியும்
கங்கையின் புனிதமும்
காவியத்தின் மொழியும்
கலந்தவள் நீதானே
இயற்கையே உந்தன்
இளமையின் முகமாய்
பிறை நிலவின்
வடிவாய் கண்டேனே !
பிறை நிலவாய்
இயற்கையவள்
முகம் எந்தன்
மனதிலே ஒளியானதே !
@ Arun
@ Kamu Pillai
0 Comments