பெயர்:ரூபாஸ்ரீ
இரண்டாமிடம்...
⚪தலைப்பு:பிறை நிலவாய் அவன் முகம்
⚪பிறை நிலவே
நீ பிழை நிலவா..!
⚪இல்லை ஒளி நிலவா
தினம் தேய்கின்றாய் ..!
⚪பின் வளர்கின்றாய்
ஏனோ இதை நீ
தொடர்கின்றாய்..!
⚪நடு இரவில் யாரைத் தேடி அலைகின்றாய்..!
⚪மாதம் ஒருமுறை எங்கே தொலைகின்றாய்..!
⚪அன்று வானில்
அந்த பிறை நிலவும்
அழகாய் தென்பட்டது..!
⚪எட்டாத உயரத்தில் நீ இருந்தாலும் எட்டிப் பிடிக்கிறது..!
⚪என் எண்ணங்கள் உன்னை சுற்றிவலம் வருகிறது..!
⚪அவன் இல்லா இரவுகளில் தேய்வது
நிலவு மட்டுமல்ல நானும் தான்..!
⚪நீல வானில் தோன்றும் நிலாவென அவ்வப்போது வந்து மறைகிறான்..!
⚪@arun
⚪@kamu pillai
0 Comments