படக்கவிதை பாலியல் தூக்கு

ஆர் ஜே சாரா
இலங்கை

*படக்கவிதைப் போட்டி*

தலைப்பு: 

*"பிஞ்சுகளின் அவலநிலை"*

பச்சிளம் குழந்தை என்று செல்லமாய் கொஞ்சி விளையாட வேண்டிய பூவை காம பசி தீர்த்து கொண்டு வாழுகின்ற பாவிகளே !

குழந்தை என்று கூட பார்க்காத காம வெறியர்களுக்கு பெயர்தான் ஆணா ?

அந்தப் பச்சிளம் குழந்தை மேல் காமவெறி எண்ணம் உனக்கு எப்படி வந்ததோ !

உன் மனம் என்ன கல்லா சிறு உயிரு துடிக்கும் பரிதாபம் கூட உன் நெஞ்சை பிளக்கவில்லையா ?

காமவெறி கொண்ட மனிதன் நீ பிறந்ததும் தாய் என்ற ஒரு பெண்ணிலிருந்து தான் ஏன் மறந்தாய் !

பூ போல் பார்க்க வேண்டிய பிஞ்சுகளை ஏன் புயல் போல் கசக்கி எரிந்து விட்டாய் !
தீயதொடுதல் என்று கூட உணராத பிஞ்சு என்பதை மறந்த அரக்கன் அல்லவா நீ !

சட்டங்கள் கொடுக்கவில்லை உனக்கான தண்டனையை பொறுத்துக் கொள் நிச்சயம் கடவுள் கொடுப்பான் உனக்கான கூலியை !

உனக்கெல்லாம் மனசு என்ற ஒன்றை கடவுள் படைக்காமல் கல்லை மனதுக்குள் புதைத்து  விட்டான் போலும் !

கருவறை என்று  கூட உருவாக முன் கழிப்பறையாக்கிய அரக்கர்களுக்கு கொடுக்க வேண்டும் உயிரோடு கல்லறை !

 @Arun 
@Kamu Pillai

0 Comments