பெயர் :ரூபா ஸ்ரீ
இரண்டாமிடம்...
🔹தலைப்பு :*எனை சுமக்கும் காலணியே*
🔹நான் இதமாக நடக்க
உன் பாதம் தேய்த்து கொண்டாயே..!!
🔹என் பாதத்தை துளைக்கவந்ததை
உன் தேகத்தில் ஏற்றிக்கொண்டாயே..!!
🔹கல்லிலும் முள்ளிலும்
கவலையின்றி நான் நடந்திட
உற்ற துணையாய் என் கூடவே நடக்கிறாயே..!!
🔹உன்னை சிலநேரம் பிரியநேர்ந்தாலும்
மீண்டும் ஓடோடி வந்து
அணைத்துக் கொள்வதில் தானே காலின் ஆனந்தம் அடங்கும்...!!
🔹உற்ற துணையாய் நீ கூடவே துன்பத்திலும்....
🔹பல வண்ணங்களில் உன் எண்ணங்கள் ஏற்றாற்போல் அளவிலேயே
உன்னழகு உள்ளது..!!
🔹புதிதாய் நீ இருக்கமட்டும்
ஆற்றை கடக்கும் போது உனை என் கையும் ஏந்துதே.!!
🔹கிழிந்த பின்
தூக்கி எறியப்படும்
செருப்பின் அருமை,
தொலைந்த பின்
தான் அறியப்படும்..!!
🔹துச்சமாய் உன்னால்
பார்க்கப்படும் செருப்பு
உன்னிடம் இல்லையேல்,
நீ துச்சமாய்
பார்க்கப்படுவாய்..!!
🔹வாழும் காலத்தில்,
வலிகள் சுமைகள்
வேதனைகள் மற்றும் பல
அவமானங்களைத் தாங்க
வேண்டியிருக்கும்.!!
🔹செருப்பைப் போலத்தான்
நம் வாழ்க்கையும்..!!
@kammu pillai 🔹
@arun🔹
0 Comments