பெயர் : *நிதர்சண கவிஞன் ரஹ்மான்*
முதலிடம்
தலைப்பு : *என்னை சுமக்கும் காலணியே*
🩴சப்பாத்து என பெயர் கொண்டோனே....!!!
🩴மீள்மமிட்டு உருவெடுத்து வந்தாயே நீயும்...!!!
🩴அட்டை பெட்டியினில் தஞ்சமாய் நீயும்....
🩴விலைபோனதாலோ படிதாண்ட மறுத்திட்டாயோ....
🩴பூ பாதம் காத்திட உடல் கிழித்தாயே.....!!!!
🩴எனை தாங்கிட்ட வலியோன் நீயே....!!!
🩴கூர்முனை கல்லும் உட்புகுந்திடா காத்திடுவாயே....!!!
🩴இணைபிரியா காதலர்கள் நீ தானோ..!!!
🩴புழுதியோடு உறவாடி வந்திடுவாய் நீ
🩴மெல்ல சகதியோடு சல்லாபம் செய்திடுவாய் நீ....
🩴கள்வனையும் கண்கவர்ந்து இழுத்திடுவாயே...
🩴ஊர்முழுக்க சுற்றினாலும் தளர்ந்திடா நண்பன் நீயே....
🩴ஆற்றை கடக்கும் தனில் ஆறுதல் கொள்வாயோ.....
🩴தலைக்கு மேல் ஒய்யாரமாய் அமர்வதனால் ....!!!
🩴ஒருமுறை பிரிந்தாலும் தூரமாய் சென்றிடுவாய்....!!!
🩴வீதிவரை அழைத்தவர் ஏனோ வீட்டிற்குள் அழைத்திடா போனது.....!!!!
🩴வாய்ப்பிற்காக அழைந்தோடிய போதும் உடன் இருந்தவனே...
🩴ஓடாய் தேய்ந்த போதும் என்னை காத்தவனே..!!!
🩴தெய்வ சிலைகளுக்கோ பாதுகை இட்டாரே....
🩴காலம் தழுவியதோர் கால்பூட்டணிகளாய் நீ....!!!
🩴கொண்டைக்கால் மறைத்தொழிந்து வாரிட்ட அழகோ....!!!
🩴உன் பரம்பரை நான் அறிவேன்....
🩴குத்திச் செருப்பு தொட்டு குறட்டுச் செருப்பானாய்.....!!
🩴தோற்பரம் இட்டு போர்யிட்ட தமிழனடா....!!!
🩴அடிபுதை அரணமாய் பாதுகாத்தோன் நீயே....!!!
🩴நிலத்தை பற்றுவித்து ஓடி முன்னேர...
🩴சப்பாத்து வகையானாயோ- வெற்றி மாலை சூடிட....
🩴குதிகால் உயர்த்தி உயரச் செய்தவன் நியே...!!!
🩴தூக்கி எறிந்திட்ட போதும் அசையாதோனே....
🩴உனக்காய் வடித்திட்ட வரிகள் இதுவே.....!!!!!!!
@Kamu pillai Sis
@Iyarkaiyin kaarigai💙
0 Comments