என்னை சுமக்கும் காலணியே

தலைப்பு : என்னை சுமக்கும் காலணியே !! 

💫என்னை சுமக்கும் காலணியே !
💫நான் உன்னை தாங்கியதை விட 
நீ என்னை தாங்கிய நேரங்களே அதிகம் 
💫உதவி முடிந்த பின் தூக்கி எரியும் 
உறவுகள் மத்தியில், 
என்னை நீ தூக்கி எரியாமல் 
நான் விட்ட இடத்திலேயே இன்றும் 
எனக்காக நீ காத்திருக்கிறாய்,, 
💫காதலர்கள் கூட உன்மீது பொறாமைபடுகிறார்கள் 
💫காலணிகளில் ஒன்று இல்லையெனில் மற்றொன்று
 உயிர் வாழாது, 
மனிதர்கள் கூட அந்நிலை புரியா நிலையில், நீ உயர்ந்திருக்கிறாய் !!
💫சேறு, சகதி, மேடு, காடு, முள், கல் தரும் கஷ்டங்களை பொறுத்துக் கொண்டு எனை காக்கிறாய் 
💫ஆறறிவு கொண்ட மனிதனுக்கு உன்னிடம் இருக்கும் மனிதாபிமானம் கூட அவர்களுக்கு இல்லை, 
💫உழைத்தால் செருப்பாக உழைத்து தேய வேண்டும் என்று உன்னை எடுத்துக்காட்டாய்  கூறிவிட்டு காரியம் முடிந்த பின் உன்னையே உதாசினப்படுத்தும் 
மனிதனுக்கு முன் என்றும் நீ உயர்ந்தவனே !!
💫நான் நடக்கும் வயதிலிருந்து நடக்க முடியாமல் படுக்கையோடு படுக்கும் வயது வரை என்றும் 
என்னுடன் இருந்த உன்னை நான் என்றும் மறவேன் !!

பெயர் : இரா.ரதிப்பிரியா 

ஊர் : இடைப்பாடி 

Insta id : ennavalin_kavidhaigal_

@⁨Iyarkaiyin kaarigai💙⁩ 
@⁨Sowbarnika Pratibha⁩

0 Comments