படக்கவிதை போட்டி

பெயர் : ரூபாஸ்ரீ 

இரண்டாம் இடம்

தலைப்பு:
🕊️கூண்டிற்குள் ஆறறிவு மானிடன் 


🕊️கைபேசியெனும் கூண்டிற்குள் கைதாகி போனயே....

🕊️உடன் இருப்போரையும்
மறந்து போனாயே...

🕊️எதிர்கால கனவுகளை கைபேசியினுள் புதைத்தாயோ... 

🕊️கைபேசியுடன் நீயும் துறவறம் பூண்டாயோ....

🕊️அகப்பட்டு போனது ஆறாம் அறிவும் ...!!!

🕊️சந்ததி நிலை தான் மறந்தாயே....

🕊️அடைபட்டது போதும் நீயும் வா...

🕊️கூண்டெனும் கைப்பேசியை உடைத்தெறிந்து வா...

🕊️தேவைக்காய் பயன்படுத்து உப்பாய் கைபேசியை !!

🕊️ உனை கண்டு மாறட்டும் சந்ததியினர் !!

@Kamu Pillai 
@பாரதி பாஸ்கி

0 Comments