அண்ணாவும் பெரியாரும்

பெயர் : யுவன் K.பாபு 

முதலிடம்

தலைப்பு : அண்ணாவும் பெரியாரும் 

திண்ணைப்பள்ளியில் 
பயின்றவன் !
புராணச் சொற்பொழிவாளர்களை குறுக்கு கேள்வியால் திணறவைத்தவன் !

ஜாதி மறுப்புத் திருமணத்தை முன் நின்று நடத்தி வைப்பவன் !
சமபந்தி போஜனத்தால் ஜாதி மதத்தை ஒழித்தவன் !

துறவுக்கோலம் துறவியாய் இவ்வுலகை  அளந்தவன் !
எண்ணற்ற அனுபவத்தால் ஆழ்மன 
மூட நம்பிக்கைக்கு முற்றுப் புள்ளி 
வைத்தவன் !

பிளேக் நோய் மீட்பு பணித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவன் !
இறந்தவர்களை தோளில் சுமந்து தானே அடக்கம் செய்தவன் !

ஆயிரம் எதிர்ப்புக்கிடையில் தங்கைக்கு விதவை திருமணம் முடித்தவன் !
விதவை திருமணத்தால் மறு வாழ்வை மீட்டுக் கொடுத்தவன் !

சமுதாயப் பணியில் தன்னையே அர்ப்பணித்தவன் !
தீண்டாமை ஒழிப்பில் தீயாய் 
உழைத்தவன் !

காந்தியாரின்
நிர்மாணத் திட்டத்தை
ஏற்றவன் !
ஆடம்பர ஆடையை தூக்கியெறிந்து 
கதர் ஆடைக்கு மாறியவன் !

கள்ளுக் கடை மறியலில் சிறைவாசம் கொண்டவன் !
புதிய மாற்றம் ஒன்று நிகழ்த்த வேண்டுமென்று அனலாய் குடி அரசு இதழை தொடங்கத் திட்டமிட்டவன் !

ஆதி திராவிடர்களும் மனிதர்களே 
கோவில் நுழைவாயில் அனுமதிக்க போரிட்டவன் !
உரிமைகள்  உண்டியலாய் உடைந்து தரையில் மிதிபடும் செம்மண் துகளாய் தூளானதில் மனம் உடைந்தவன் !

சினமுற்ற வெள்ளைத் தாடியன் 
வேங்கையாய் வீற்று நின்று !
மனுதர்ம சாஸ்திரத்தையும் ராமாயணத்தையும் தீயிட்டு கொளுத்துங்களென்று 
தீக்குரலால் மறுப்புகளை சுட்டெரித்தான் !

சுயமரியாதை மாநாட்டை பட்டித் தொட்டி முழுதும் கம்பீரமாய் முன் மொழிந்தான் !
பகுத்தறிவு ஏட்டில் தமிழ் எழுத்துச்  சீர் திருத்தத் தொகுப்பை திமிராய் தொடங்கியும்  வைத்தான் !

ராஜாஜியின் இந்தித் திணிப்பு,  
கல்வி ஒழிப்பு சாமர்த்திய ஊழலை !
தமிழர் மாநாட்டில் எரிமலையாய் எதிர்த்து எழுச்சி நடையில் முதல்வரையே பதறவைத்தான் !

அறிஞர் அண்ணாவே என்னையும் வியக்க வைத்த வித்தகன் தாடிக்காரன் !
ஆறறிவில் பகுத்தறிவென்னும் ஏழாம் அறிவை புகுத்தியவன் ஈரோட்டுக்காரன் !

பெரியாரை பொடி வைத்து 
பொசுக்கும் 
குள்ள நரிகளுக்கு ஓர் குட்டி கவி !
தனி மனிதனின்  களவியல் புலவியல் வாழ்க்கை ஆராயாதே !
சமூகத்திற்கு செய்த நன்மைகள் என்னவென்று ஆராய மறவாதே !

தீண்டாமை ஒழிப்போம் !
அனைவரும் சமமென்று உணர்வோம் !🔥

@⁨Kamu pillai Sis⁩ @⁨Sowbarnika Pratibha⁩ @⁨Barathi Pratibha⁩

0 Comments