மாதவன் கவிச்சிதறல்
திருநங்கை :
💥ஆண்டவன் படைப்பில் ஓர் அதிசயம்,
அரவணைத்தால் அனைத்துமிங்கே. சாத்தியம்..
💥பிறப்பில் ஆணாகினும்,
உணர்வுகளில் பெண்ணாகி,
இழிவு பட்டம் கொடுக்கிறது இச்சமூகம்..
💥விலக்கும் உதடுகள், விடியல் கொடுக்காவிடிலும், வாயால் விரதமிருந்தால் கூட போதும்..
💥ஆணின் பாதி, பெண்ணின் மீதி,
இறைவனுக்கு நிகரல்லவா? இப்படைப்பு..
💥காணொளி ஒன்று கண்டேன்,
திருநங்கையிடமிருந்து,
எங்கள் தேவை,
உங்கள் பார்வை மாற்றமே என்றார்.
💥'ஒரு முறையேனும் என்னை "அம்மா" என்று அழைத்து பார், ஆருயிரையும் உனக்கே தருவேன்'
என்ற ஓர் ஏக்க குரல் அவள் நாவிலிருந்து..
💥பேருந்தில் அவள் உலாவில், "சாப்பிட்டாயா?"
என்ற வினா கூட விடை கொடுக்குமாம் அவர்களின் அனைத்து சிக்கல்களுக்கும்...
💥கோடானு கோடி நன்றிகள்,
கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு,
அரவாணி என்று அலைகளித்தோரும்,
சற்றே திரும்பி உற்றுநோக்கினர்,
திருநங்கை என்று மரியாதை நீட்டும் கணத்தினில்...
💥கற்பழிப்பவனையும்,
கடத்தல்காரனையும்,
கள்ளதனமுடையவனையும், ஏற்கும் இவ்வுலகு,
உருவ வேற்றுமையை ஊதி பெரிதாக்குவது ஏனோ?
💥குடும்பமும் ஒதுக்கி,
குலமும் விளக்கி,
குறுகிய மனதோடு,
கொடுமைகள் மட்டும் தானா? அவர்களுக்கு..
💥எதற்கு இத்தனை பாகுபாடுகள்?
உருவத்திலும், பேசும் குரலிலும் சற்று மாற்றமே !
மறக்க வேண்டாம்,
அவர்களும் மனித உறவுகளே..
💥காலம் கனிகிறது இங்கே !
அவர்கள் இங்கே பள்ளி, உயர் பணி, அரசு பணி என அனைத்திலும் பதித்து வருகின்றனர், தங்கள் கால் தடங்களை..
💥ஒரு நாள் வரும்,
அவர்களும் உலகை ஆளும் நிலை,
ஏற்போம் அவர்களை,
கோர்ப்போம் கைகளை..
💥அவர்களையும் மனிதராய் மதிப்போம்,
அழகாய் மனிதம் காப்போம்..
💥அவர்களுக்கு ஆதரவாய் என்றும் ஒலிக்கும் எமது குரல்..
ஒரு சாமனியனின் குரலாக.....
-மாதவன் கவிச்சிதறல்#
@Kamu pillai Sis
@Barathi Pratibha
0 Comments