அன்பிற்குரிய ஆசிரியர்களுக்கு

முதலிடம் 💐
பெயர் : கவிதையின் காதலன் பாண்டி

தலைப்பு : *அன்பிற்குரிய ஆசிரியர்களுக்கு*

அ - அகிலமும் அறிய வைத்து
அறிவையும்  துளிர் விட வைத்ததும் நீங்களே... 

ஆ - ஆதி முதல் அந்தம் வரை தெளிவுரை தந்ததும் நீங்களே... 

இ - இயற்றியானாயே நல்வழி படுத்தினாயே நீங்களே  என்னை முழுவதுமாக.. 

ஈ - ஈசன் கூட ஆசான் உனக்கு அடுத்தது தானே..
மாதா, பிதா, குரு, தெய்வம்... 

உ - உண்மையும் அதன்  உவமையும் யாது என்று அறிந்திடும் பக்குவம்  நீங்களே  தந்தீர்கள்... 

ஊ - ஊரெங்கும் என் பெயர் உயர்ந்திட நீங்கள் தானே ஊக்கம் தந்தீர்கள்... 

எ - எழுத்தறிவு முதலாய் தந்ததும்  நீங்களே என் முதல் துணை எழுதுகோலும்  உங்கள் கைகளே... 

ஏ - ஏழை என்று பாராமல் கல்வியை  நீங்கள் தானே இலவசமாக தந்தீர்கள் அரசு ஆரம்ப பள்ளியில் அரச மரத்தின் அடியிலும்... 

ஐ - ஐந்து பூதங்கள் பற்றியும் 
ஐந்து அறிவு உயிர்களிடமும்  அன்பு காட்டிட உங்களை  தானே பின்பற்றினேன்... 

ஒ - ஒவ்வொரு ஆண்டும் புதிய அவதாரம் நீங்கள் எடுத்தாலும்... 

ஓ - ஓர் இடத்தில் நீங்கள் இருந்து கொண்டு எங்களை வாழ்க்கையில் உயர்த்தி பார்ப்பதும் நீங்கள் தானே..

ஔ - ஔடதம் எழுத்துக்களிலும் இருப்பதையும் உங்களிடம்  தானே கற்றுக் கொண்டேன்... 

ஃ - ஃபேஸ்புக்கிலும் அலைபேசியிலும்  இப்போது வாழ்த்துக்கள் மட்டுமே சொல்ல முடிகிறது 
ஒவ்வொரு ஆசிரியர் தினத்திற்கும் ....
என்று நேரில் பார்க்கும் தருணம் வந்திடுமோ? அன்றும் ஆசிர்வாதமும்...
அப்போது   செல்லமாக நீங்கள் தட்டிக்கொடுப்பதை மீண்டும் வாங்கிடவே ஆசை ...



@⁨Sapna Sis⁩ @⁨Kamu pillai Sis⁩

0 Comments