தலைப்பு :
*பெண்ணியம்*
முதலிடம்
இங்கு பலரது பூகம்பங்கள் மறைக்கப்பட்டு இருக்கின்றன...//
பலரது பூகம்பங்கள்
மறக்கப்பட்டு இருக்கின்றன..//
பலரது பூகம்பங்கள்
பூக்களாய் மாறி இருக்கின்றன..//
பெண் என்ற வார்த்தையின் முடிவில் பலரின் வாழ்க்கையின் வழி(லி)கள் இருக்கின்றன...//
பிறந்த நிமிடத்தில்
பூக்களாய் சிரித்தவள்..//
வளர வளர
பூகம்பமாய் எரிந்திருக்கிறாள்...//
சமையற் கட்டினுள் பூவாய் இருப்பவள்..,
சில சமயங்களில் பூகம்பமாய் வெடித்திருக்கிறாள்...//
கொஞ்சி பேசும் போது பூவாய் இருந்தவள்..,
கோபத்தின் போது பூகம்பமாய் வெடித்திருக்கிறாள்...//
அள்ளி அணைக்கும் போது
பூவாய் இருந்தவள்..,
அதட்டி பேசும் போது பூகம்பமாய் வெடித்திருக்கிறாள்..//
ஆம் அவளே பெண்.....
சீறும் பாம்பை போல்
சினுசினுக்கும் அவள்தான்..,
சின்ன சின்ன விஷயங்களில்
சுருண்டு போகிறாள்..//
ஆயிரம் பிரச்சனைகளுக்கு
அடித்தளம் போடுவதும் அவள்தான்....,
ஆனால்
தன் ஆசைகளை அமைதியாய்
மறைத்து விடுகிறாள்..//
ஏனென்றால்
அவள் பெண்.....
என்றுமே பெண் பூகம்பமல்ல....,
ஆனால்
என்றுமே அவள் பூக்கள்.....//
நன்றி
தேடல் மணி
நாமக்கல் மாவட்டம்
@Barathi Pratibha @Kamu pillai Sis
0 Comments