தெய்வ திருமகள்(ன்)

பெயர் : நிதர்சண கவிஞன் ரஹ்மான்

தலைப்பு : *பொற்குவியல்*

முத்துக்குவியலில் 
கண்டெடுத்த பொற்குவியல் 
நாங்கள்...

தேவையற்ற பெயர்களின் அழைப்பினில் உள்ளதோ???

 சந்தோஷம் என்னவென்ற கேள்விகளில் நாங்கள்...,

தினம் தினம் தொலைகின்றோம்....???

எங்கள் கண்கள் சுடர் விட்டு நளினத்தோடும்...!!

ஆயிரம் ஆயிரம் 
கவிதைகள் சொல்லிடும்...!!!!!

கையிடுக்கு ஓசையிலே ஏகக்கதைகள் உண்டு...!!

அதற்கிட்ட பெயர்களோ ஆயிரம் உண்டு.....!!

*மதிக்கப்பெற்ற பெயர் ஒன்றே திருநங்கையாம்*

அர்த்த நாதீஸ்வரரின் அழகிய படைப்பு நாங்கள்...

கர்வத்தோடு சொல்லிடுவோம்...

இறைவனின் கிருக்கலில் அழகிய கிளிஞ்சல்களாக...!!!!!

உணர்வுகளை கொன்று புதைத்த போதும்...,,

உனை வாழ்த்த மறந்திடா கரங்கள் ...!!

துரத்தி துரத்தி  அடித்த போதும்,,

 தலை கர்வத்தோடு நின்றிடுவோம்...

எனை கண்டு மிரல்வதேன் ...!!

வயிற்றை கழுகவேனும் காசும் இப்பதானே....!!!!

சோறுகிட்டு நிக்குறேனே மானத்தையும் இழந்துபுட்டு....!!!!

கொச்சை சொல்லு சொந்தக்காரி ஆனேனே...!!!

ஓர் கணம் பேசிடு எங்களோடு...!!!

சமஉரிமை இல்லாவிடில், தனியுரிமை ஒன்றே போதும்...

புறிந்திடும் எங்களின் மனம் உன்னோடு....,,,

பதிந்திடும் மனதோடு கொஞ்ச நேரம்...,,!!

கசிந்திடும் கண்ணீரும் அதற்கு சாட்சி....!!!!

@⁨Kamu pillai Sis⁩  @⁨Barathi Pratibha⁩

0 Comments