ம.சுதா கவி
மதுரை மாவட்டம்
*ராதா கிருஷ்ணரின் காதல் கதை*
கோகுலத்தில் குழல் ஓசை
கோபியரின் ஆடல் இசை
கிருஷ்ணனின் பாலக பருவம்
ராதையோ தேவதை உருவம் !
கோகிலம் ஆண்ட கண்ணனை
கோதையர் செய்தனர் வர்ணனை
புல்லாங்குழல் இசை ஆள
ஆயிரம் கோபியர் அங்கு சூழ !
கோபியர் மயங்கிய வேளையிலே
அவனும் விழுந்தான் காதலிலே
குழலிசை நாடிய ராதை மனம்
ராதாவை தேடிய அந்த பாதம் !
ராதையும் வாடிய அந்தி நேரம்
போதனை கூடிய காதல் அறம்
முன் கோபியாம் ராதா முகம் சுழிக்க
பின் கொஞ்சியே அவன் சிரிக்க !
ராதாகிருஷ்ணன் காதல் மனம்
வானும் நிலவாய் கடந்த தினம்
துவாரகை நோக்கி அவன் பயணம்
ராதையை வாட்டிய அந்த தருணம் !
நீதி நிலைநாட்டிட சென்றிடடா
நித்தமும் மனதிலே நின்றிடடா
நீதிவலம் வர கோரினாள்
ராதா கிருஷ்ணனை மீட்டினாள் !
கிருஷ்ணனும் பிரியா நினைவை
ராதா புன்னகை செய்த மனதை
ராதையை பிரிந்திட்ட காதலை
தாங்கிய அந்த துவாரகை !
இருவரும் சேரா அந்நிலை
மனதிலே சேர்ந்திட்ட புனித நிலை
ராதாயின்றி அவன் இல்லை
கிருஷ்ணன் இன்றி ராதா இல்லை !
(குறிப்பு :அவன் - கிருஷ்ணன்)
0 Comments