மௌன மொழிகள் செப்5-7

ம.சுதா கவி 
மதுரை மாவட்டம்

*மௌன மொழிகள்*

*(எந்தன் மனதில் கவியின் மௌன மொழிகள்)*

கருவறை இருளில் 
நான் கண்ட அமைதி 
கர்ப்பப்பை நிழலில்
நான் தொட்ட தாய்மை
பிரசவத்தின் சுகத்தில்
தாய் கண்ட நிம்மதி
பிள்ளை வரத்தில்
தாய் பெற்ற வெகுமதி
தாயும் சேயுமாய் 
பேசிய மௌன மொழிகள் !

குழலின் துளையில்
இசையின் கோர்வை
நிலவின் ஒளியில்
கயலின் பார்வை 
கடலின் அலையில் 
காரிருள் போர்வை 
பசுமையின் தோளில் 
பரவசத்தின் மேன்மை
இயற்கையும் நானுமாய் 
பேசிய மௌன மொழிகள் !

அன்பின் துகிலும் 
ஆருயிர் நட்புறவும்
இன்பத்தின் பதுமையும் 
ஈன்ற நல்லுள்ளமும் 
தோழமை நெஞ்சமும் 
தொடுத்த பாசமும் 
தமிழின் நேசமும் 
கவியின் பந்தமும் 
உறவும் உணர்வுமாய் 
பேசிய மௌன மொழிகள் !

அறிவின் ஊற்றாய் 
ஒளியின் கீற்றாய் 
அறிவியல் நுட்பமாய் 
அதியத்தின் புதுமையாய்
அற்புதத்தின் புதிராய் 
ஆதியின் அந்தமாய் 
அந்தத்தின் ஆரம்பமாய் 
அகிலத்தின் அதிபதியாய் 
தேடலும் ஊடலுமாய் 
பேசிய மௌன மொழிகள் !

எண்ணத்தின் வடிவாய் 
எழுச்சியின் உருவாய் 
முயற்சியின் துணிவாய் 
முடிவிலா தொடர்வாய் 
செயலின் வழியாய் 
சிறப்பின் மொழியாய் 
சீர்மை யின் ஆற்றலாய்
வாழ்வின் வேள்வியாய் 
காலமும் கடமையுமாய் 
பேசிய மௌன மொழிகள் !

தனிமையின் இசைவாய்
துன்பத்தின் ஊற்றாய் 
இன்பத்தின் சிறுமையாய் 
ஏமாற்றத்தின் வலியாய் 
உறவுகளின் பலியாய் 
தோல்வியின் வேதனையாய் 
வேள்வியின் சாதனையாய்
வெற்றியின் இதமாய் 
என் மனதும் மதியுமாய் பேசிய மௌன மொழிகள் !

@ Sapna 
@ Kamu Pillai

0 Comments