ம.சுதா கவி
மதுரை மாவட்டம்
மூன்றாம் இடம்
*அன்பிற்குரிய ஆசிரியர்களுக்கு*
(மாண்புமிகு மாணவியின் கவிமடல்)
அன்னையின் உணர்வே ஆசான் உறவே
ஆணையின் பிறப்பிடமே
தலைவணங்கி நின்றேன் !
உன் தனித் திறன் கொடுத்தாய்
தந்தையின் பண்பை தானே வளர்த்தாய்
தரணி எங்கும் என்னை சாதிக்க வைத்தாய் !
மொழியை இனிதே கற்றுத் தொடுத்தே காற்றில் இசையாக செய்தாய் கவலைக் கடலை கரையேர தோழமை தந்தாய் !
ஆசை நிழலை நிசமாக ஊக்கம் அளித்தாய்
ஒழுக்கமும் நேர்மையும் ஒருங்கே எனக்களித்து
என் எண்ணம் ஓங்க செய்தாய் !
அன்பாய் ; பண்பாய் !ஆதியாய் ; அந்தமாய் !
கல்வியாய் ; கற்றலாய் !
அறிவியலாய் ; ஆற்றலாய் !
என்றென்றும் உன்னை வணங்குகிறேன்
உன் ஆசியை நான் தொழுதே வாழ்கிறேன் !
அன்பிற்குரிய ஆசிரியர்களுக்கு
மாண்புமிகு மாணவியின் கவிமடல் சமர்ப்பணம் !
@sapna
@kamu Pillai
0 Comments